கட்டண அதிகரிப்பை தடுத்து நிறுத்திய பசில் - அம்பலப்படுத்தும் சம்பிக்க
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க, தேர்தல் தோல்விக்கு பயந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பல சந்தர்ப்பங்களில் கட்டண உயர்வை எதிர்த்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதில் பசில் ராஜபக்ச கவனம் செலுத்தியதாகவும் அதனால் கட்டணத்தை அதிகரிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றியில் கவனம் செலுத்தியதாகவும், உத்தேச மின்சார கட்டண உயர்வை எதிர்த்து பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் பசில் ராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். 2015ம் ஆண்டு தாம் அமைச்சராக பதவியேற்றதும் 45 மில்லியன் ரூபா நட்டத்தில் இருந்த இலங்கை மின்சார சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியதாக அவர் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபைக்கு தொழில்சார் நிபுணர்கள் மற்றும் நிபுணர்களை நியமித்ததாகவும் அவர் கூறினார். அரசாங்கம் பொருளாதார எரிமலையில் நிலைகொண்டிருப்பது பசில் ராஜபக்ச தலைமையிலான நிர்வாகத்திற்கு தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார். TW
Post a Comment