Header Ads



ராஜபக்ஷே கூட்டத்தைப் பாதுகாக்கிறேன் என்று உறுதியளித்திருந்தால், நான் இன்று ஜனாதிபதியாகியிருப்பேன் - சஜித்


 ராஜபக்ஷே கூட்டத்தைப் பாதுகாக்கிறேன் என்று நான் உறுதியளித்திருந்தால் நான் இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருப்பேன், ஆனால் மக்கள் என்னை கல்லால் அடித்து விரட்டியிருப்பார்கள், சஜித் பிரேமதாச ஒரு போதும் இரட்டை ஜனாதிபதியாக இருக்கமாட்டார்! நாம் கொள்கை ரீதியான அரசியல் செய்கிறோம், தற்போதைய அரசாங்கத்தில் டொலர், பணம் மற்றும் சலுகைகளுக்கு அடிபணிந்து அமைச்சர் பதவியை எந்தவொரு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச தெரிவித்துள்ளார் .

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள் என திட்டமிட்ட பாரிய ஊடகப் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரசாரங்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை தீர்க்கும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக எம்.பி.க்களை பணத்திற்கு வாங்கும் பழைய விளையாட்டையே முன்னெடுக்க அரசு தயாராகி வருவதாகவும், அதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த வகையிலும் பங்களிக்க மாட்டாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.