Header Ads



ஜனாதிபதிக்கு நன்றி, கூறுகிறது முஸ்லிம் கவுன்சில்

இலங்கை வரலாற்றில் ஒரே சமயத்தில் 2 முஸ்லிம் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முஸ்லிம் கவுன்சில் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்ததாவது,

முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட் வேண்டுமென முஸ்லிம் கவுன்சில் பல மாதங்களுக்கு முன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தது. அதன்பின் நீண்ட இடைவேளைக்குப் பின் ஜனாதிபதியின் கையொப்பத்துடன், முஸ்லிம் கவுன்சிலுக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டது. 

அதாவது முஸ்லிம் ஆளுநர் நியமனம் குறித்து, கவனம் செலுத்தப்படுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் அண்மையில் நடந்த ஆளுநர் நியமனத்தில் கிழக்குக்கு ஹிஸ்புல்லாவும், மேற்குக்கு அசாத் சாலியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு நன்றி கூறி முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியது என்றார்.

1 comment:

  1. Amin has failed to understand why My3 appointed 2 Muslim Governors in the western and eastern provinces now, not at the beginning of Yahapalanya.

    ReplyDelete

Powered by Blogger.