Header Ads



பள்ளிவாசல் நிர்வாகிகளே, முஸ்லிம் வாலிபர்களை கண்காணியுங்கள் - முப்தி றிஸ்வி கண்டிப்பான கோரிக்கை


- ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் -

இலங்கையிலுள்ள ஒவ்வொரு பள்ளிவாசலும் தமது ஆளுகைக்கு உட்பட்ட முஸ்லிம் இளைஞர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென ஜம்மியத்துல் உலமாத் தலைவர் முப்தி றிஸ்வி கண்டிப்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தளத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட, சம்பவம் தொடர்பில் கேட்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

இதுகுறித்து முப்தி றிஸ்வி மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் தொடர்ந்து அமைதியும், சகஜ வாழ்வும் நீடிக்க நாட்டு முஸ்லிம்களின் மகத்தான பங்களிப்பும், தியாகங்களும் அவசியமாக தேவைப்படுகிறது. எனவே நாட்டு ஒருமைப்பாட்டுக்கு முஸ்லிம்கள், தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை நல்குவது அவசியமாகிறது.

முஸ்லிம்களாகிய நாம் ஒற்றுமையாக செயற்படுவது பர்ளு அய்ன் ஆகும்.

இந்தநிலையில் முஸ்லிம் இளைஞர்கள், எமது நாட்டிலே வழங்கப்பட்டுள்ள உரிமைகள், சலுகைகள், சுதந்திரங்கள் குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அத்துடன் ஒவ்வொரு பள்ளிவாசலும் தமது ஆளுகைக்குள் உட்பட்ட முஸ்லிம் இளைஞர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்களின் செயற்பாடுகள் பற்றி ஆராய வேண்டும். அவர்கள் பள்ளிவாசலுடன் தொடர்புகளை பேணுகையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஒத்துழைக்கும் தன்மை அதிகரிக்கும் எனவும் முப்தி றிஸ்வி மேலும் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. இளைய தலைமுறையினர்களை சரியாக வழி நடாத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருக்க வேண்டும். அரசியல் வாதிகள் அவரகளின் எதிர் பாட்டிக்கார்களை அடக்கி ஆள்வதற்காக இளைய தலைமுறையினர்களை சண்டியர்களாக உருவாக்கி வைத்திருப்பதை நாட்டின் சகல பிரதேசங்களிலும் காண முடியும்.
    அரசியல் வாதிகள் சமூக பொறுப்புணர்வுடன் கடமையாற்ற முன் வரவேண்டும்

    ReplyDelete
  2. All Jumma stages should be utilized by ACJU to guide the Muslims toward PURE FORM OF Islam that is to HOLD ON TO THE ROPE OF Allah (Quran and Sunnah) as it was held by Salafus saliheens and not inclined to the call of any Jamaaths.

    Since ACJU left the Jumaa stages and Masjids to ONE Jamaath, which did their DAWA but not based on ILM (knowledge)..... The generation failed to learn the pure message of ISLAM.

    This made the youths to got attracted to emotional speakers of certain Jamaaths and lost the Peaceful message of PURE form of ISLAM.

    May Allah guide us to understand the TRUE TEACHING of ISLAM as understood and followed by Salafus Saliheens.

    ReplyDelete

Powered by Blogger.