Header Ads



ஜம்மியத்துல் உலமா, விடுத்துள்ள அவசர அறிவித்தல்


2016.05.26 (18.08.1437)
கௌரவ தலைவர், செயலாளர்,
சகல மஸ்ஜித் நிர்வாகிகள்,
السلام عليكم ورحمة الله وبركاته

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கிராம சேவகர்களிடம் தம்மை பதிந்து கொள்வதற்கான வேண்டுகோள்

நாடு முழுவதும் பெய்த மழை காரணமாக மண்சரிவு, வெள்ளம் போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளதுடன் பாரியளவிலான உடமைகளும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரதேச கிராம சேவகர்களிடம் தம்மை கண்டிப்பாக பதிந்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும்; வேண்டிக் கொள்கின்றது. ஏனெனில் அரசு உதவிகள் கிராம சேவகரின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அமையும் என்பதையும் அறியத்தருகின்றோம். 

வஸ்ஸலாம் 

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர் 
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

குறிப்பு (நிர்வாகிகளுக்கு) : மேற்படி கடித்ததை ஜும்ஆ மற்றும் ஏனைய தொழுகைகளுக்கு பின்னர் மக்களுக்கு வாசித்துக்காட்டி பாதிக்கப்பட்டவர்கள் தங்களை கிராம சேவகர்களிடம் தம்மை பதிந்து கொள்ள ஏற்பாடு செய்யுமாறும் இக்கடிதத்தை அறிவித்தல் பலகையில் மக்கள் பார்வைக்கு வைக்குமாறும் சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.

No comments

Powered by Blogger.