Header Ads



மஸ்ஜித் ஹரம் ஷரீபை, சுத்தம்செய்யும் இந்திய செல்வந்தர்

Sheik Mohamed Badhusha
 · 
‪#‎கோடீஸ்வரர்_பக்கீராக‬.....!!!!!

ஒரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின், அங்கு ஹரம் ஷரீபை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஒரு வயோதிபருக்கு சில ரியால்களை ஸதக்கா செய்ய வேண்டும் என நாடி அவரை அணுகினார்.
.
"எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.
.
அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார். அந்த சவ்தி மனிதரிடம் கூறினார், "நான் ஸதக்கா ஏதும் தேவையற்றவன். இதோ எனது மணிபர்ஸை பாருங்கள்."
.
அது பல வங்கிகளின் கார்ட்டுகாளால் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.
.
அந்த சவ்தி மனிதர் அதிர்ச்சியால் அதிர்ந்துவிட்டார். "நீங்கள் யார்? இங்கு என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்.?"
.
"மாஷா அல்லாஹ், எனக்கு காஷ்மீரிலும் இந்தியா எங்கனும் பல தொடர் ஹோட்டல்கள் இருக்கின்றன. அடிக்கடி மஸ்ஜிதுல் ஹரமை சுத்தம் செய்வதற்கு தொழில் வேலை வாய்ப்பு வீஸாவுக்கு விண்ணப்பித்துக் கொள்வேன். அல்லாஹ்வின் இந்த புனித மஸ்ஜிதின் பணியாளனாக இரவு பகலாக சேவையாற்ற விரும்புகிறேன். 
.
அவன் என் பாவங்களை மன்னிக்க வேண்டும், என் நற் செயல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவனது திருமுக தரிசனத்தை எனக்குத் தந்தருள வேண்டும் என்பதற்காகவே இதை செய்கிறேன்." என்று அந்த காஷ்மீரி கூறினார்.... ஸுப்ஹானல்லாஹ்!
.
Source& photo courtesy: Saudi Labour

7 comments:

  1. மாஷா அல்லாஹ் நாம் வெட்கி தலை குனிய வேண்டும்

    ReplyDelete
  2. Excellent mentality person. Masah Allah

    ReplyDelete
  3. யா அல்லாஹ்!
    அன்னாரின் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வாயாக.

    ReplyDelete

Powered by Blogger.