கடூழிய சிறைத்தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்ட மஹிந்த, பசில், கோத்தபாய
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றிருக்காது விட்டிருந்தால் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகிய மூவரும் இன்று கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் சுயரூபம் வெளிவந்திருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். மஹிந்தவுடன் இருந்தவர்கள் அவரை கைவிட்டபோதும் ஜனாதிபதியும் நாமுமே அவருடன் இருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் கடும்போக்கு கொள்கையில் இருந்து செயற்பட்டமைக்கான வரலாறுகள் தான் உள்ளன. அதேபோல் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் குடும்ப அரசாங்கத்தின் மீது உள்ள விரோதமும் எமக்குத் தெரியும். அவ்வாறு இருக்கையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலைமைகளின் போது கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றிருக்காவிடின் இன்று நிலைமைகள் மிகவும் மோசமானதாக அமைந்திருக்கும்.
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ, மற்றும் பசில் ராஜபக் ஷ ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டு இன்று மூவருக்கும் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் கைவரிசையை காட்டியிருப்பார்கள். அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதியும் நானும் கட்சிக்குள் இருந்ததனால் தான் இவர்களை காப்பாற்ற முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Saaaaaaaaaaa.became good joker.charly chaplin duplicate
ReplyDeleteThe culprits have been given protection, they could continue their business in the future as well! விந்தையான உலகம், விசித்திரமான மக்கள், 'ஏ'மாற்றம் கொண்டு வரும் அரசியல்!
ReplyDelete