Header Ads



606 கைதிகளுக்கு ஜனாதிபதி, பொது மன்னிப்பு வழங்கினார்

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினமான இன்று (04), சிறு குற்றங்கள் புரிந்த 606 கைதிகளுக்கு, ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 593 ஆண்கள், 13 பெண்கள் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

விடுதலை வழங்கப்படாத கைதிகளுக்கும் இன்றைய தினத்தில் விசேட சலுகைகள் வழங்கப்படும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.