Header Ads



மஹிந்த ராஜபக்ஷவை, கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவை கண்டுபிடித்துத் தருமாறு குருநாகல் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த பொதுத் தேர்தலின் மூலம் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். அத்துடன் அவரது வேண்டுகோளுக்கு மதிப்பளித்த குருநாகல் சுதந்திரக்கட்சி வாக்காளர்கள், கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்களுக்குப் பதிலாக மஹிந்தவின் அணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

எனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவோ, அவரது அணி நாடாளுமன்ற உறுப்பினர்களோ குருநாகல் மாவட்டத்தில் இதுவரை ஒரு பொதுமக்கள் சந்திப்பையேனும் நடத்தவில்லை. குருநாகல் மாவட்டத்துக்கு மிக அபூர்வமாக வருகை தரும் மஹிந்த ராஜபக்ஷவும், விகாரைகளில் நடக்கும் வழிபாடுகள் தவிர்த்து பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை.

இதன் காரணமாக மஹிந்த மற்றும் அவரது அணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது பொதுமக்களுக்கு முடியாத காரியமாக மாறிப்போயுள்ளது.

எனவே மஹிந்தவுக்காக செயற்பட்ட பிரதேச ஒருங்கிணைப்பாளர்களை சந்திக்கும் பொதுமக்கள் தமது வாக்குகளால் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தவை கண்டுபிடித்து சந்திக்க முடியவில்லை என்றும், அவரைக் கண்டுபிடித்துத் தருமாறும் அண்மைக்காலமாக வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியுள்ளனர். இது மஹிந்தவின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நெருக்கடியாக மாறத் தொடங்கியுள்ளது.

3 comments:

  1. எதிர்பார்த்த ஒன்றுதான். ஜனாதிபதியாகி இருந்தால்..............

    ReplyDelete
  2. நல்ல முடிவு இப்பதான் மக்கள் உசாராகி விட்டார்கள்போல் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.