ரக்னா லங்கா விவகாரம், பொறுப்புக் கூறவேண்டியவர்கள்
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரக்னா லங்கா விவகாரம் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர்களின் பெயர்களை பாரிய நிதி மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவெளியிட்டுள்ளது.
இதன்படி , முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரல் ஜயந்த பெரேரா, அட்மிரல் ஜயந்த கொழம்பகே, எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்சங்க சேனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா ஜயரத்ன ஆகியோரின் பெயர்களை அவ் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதேவேளை ரக்னா லங்கா விவகாரம் தொடர்பில் வாக்குமூலமொன்றை அளிக்கும் பொருட்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளார்.
Post a Comment