Header Ads



இப்படியான தந்தைக்கு மகனாக பிறந்தது குறித்து பெருமை - மரணதண்டனை கைதி வாசின் மகன்

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலைக் குற்றத்துடன் தனக்கு தொடர்பில்லை என மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவின் புதல்வர் ரவிந்து குணவர்தன தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணத்தை கூறுமாறு நீதிபதிகள் கேட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் இப்படியான தந்தை ஒருவருக்கு மகனாக பிறந்தது குறித்து பெருமையடைவதாகவும் தந்தையுடன் சிறைக்கு செல்ல கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் ரவிந்து குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை நாட்டுக்காக பாரிய சேவையை செய்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.