Header Ads



மோல்டாவிற்கு எவ்வித பாதுகாப்பு பரிவாரங்களையும், அழைத்துச் செல்லாத மைத்திரி விக்ரமசிங்க

பிரதமரின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மோல்டாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

மோல்டாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் அமர்வுகளில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு விஜயம் செய்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டுக்கு சமாந்திரமாக, பொதுநலவாய நாடுகள் மகளிர் மாநாடொன்று நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கையை மைத்திரி விக்ரமசிங்க பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார்.

மைத்திரி விக்ரமசிங்க நேற்று மோல்டாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

மோல்டா இன்டர்கொன்டினல் ஹோட்டலில் தங்கியுள்ள மைத்திரி விக்ரமசிங்க, எவ்வித பாதுகாப்பு பரிவாரங்களையும் அழைத்துச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண பொதுமகனைப் போன்று அவர் ஹோட்டலில் உலவியமை ராஜதந்திர மட்டத்தில் பாராட்டை பெற்றுககொடுத்துள்ளது.

மைத்திரி விக்ரமசிங்கவுடன், சானிகா இம்புலான மற்றும் சாரா சொய்சா ஆகியோரும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.