ஞானசாரரும் அவர் குழுவினரும், சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது - சிராஸ் நூர்தீன்
-ARA.Fareel-
சட்டத்தின் கைகள் மிக நீளமாக இருக்கின்றன. பொது பலசேனாவின் குருமார்கள் மாத்திரமல்ல எந்தவொரு குற்றவாளியும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகா விட்டால் அவர்கள் இல்லாமலே வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நீதிமன்றுக்கு இருக்கிறது. என RRTஅமைப்பின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிராஸ் நூர்தீன் கருத்து வெளியிட்டார்.
பொதுபலசேனாவின் குருமார்கள் குற்றவாளிகளாக அலைந்து திரிய விரும்பவில்லை. அதனால் நாட்டின் எந்த நீதிமன்றிலும் ஆஜராகுவதில்லை எனத்தீர்மானித்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் எமது நாட்டில் சட்டம் ஒன்று இருக்கிறது. சட்டத்திற்கு அனைவரும் சமமானவர்கள். பொதுபலசேனா அமைப்பின் குருமார்களுக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடபடி முறைக் கோவையின் படி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிணைகள் நிபந்தனைகளின் கீழேயே வழங்கப்பட்டுள்ளன. பொதுபலசேனாவின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள குருமார்கள் நீதிமன்றில் குறிப்பிட்டதினத்தில் ஆஜராகாவிட்டால் அவர்களுக்கு எதிராக பிணை நிபந்தனையை மீறியதாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.
குற்றவியல் நடபடிக்கோவை இலக்கம் 192 உபபிரிவு 2இன் படி ஒரு குற்றவாளி நீதிமன்றில் ஆஜராகாதவிடத்து நீதிமன்றில் அவரது சமுகம் இன்றியே விசாரணை நடாத்தி தீர்ப்பு வழங்கப்பட முடியும். அதனால் நீதிமன்றில் வழக்குகளுக்காக ஆஜராக வேண்டிய பொது பல சேனா அமைப்பின் குருமார்கள் ஆஜராகாது விட்டால் இந்த நடைமுறையை நீதிமன்றம் அமுல்படுத்தும் குற்றமிழைத்தவர்கள் ஒரு போதும் தாம் நினைத்தவாறு சட்டத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளமுடியாது என்றார்.
பொதுபலசேனா அமைப்பின் குருமார்கள் பலருக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரணையின் கீழ் இருக்கின்றன. அதன் செயலாளர் ஞானசார தேரர் மீது குர்ஆன் அவமதிப்பு உட்பட பல வழக்குகள் விசாரணையின் கீழ் உள்ளன.
ஜாதிக பல சேனாவின் தலைவரும் முன்னாள் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வட்டரக்க விஜித தேரர் பொதுபல சேனா அமைப்பின் குருமார்களுக்கெதிராக 8 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்குகளின் சந்தேக நபர்கள் 36 பேரும் பொதுபலசேனாவின் உறுப்பினர்களாகும்.
வட்டரக்க விஜிததேரரை கடுமையாக தாக்கியமை, காயம் விளைவித்தமை, அவர் பயணித்த வாகனத்தை சேதப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தின் கைகள் மிக நீளமாக இருக்கின்றன. பொது பலசேனாவின் குருமார்கள் மாத்திரமல்ல எந்தவொரு குற்றவாளியும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜராகா விட்டால் அவர்கள் இல்லாமலே வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் நீதிமன்றுக்கு இருக்கிறது. என RRTஅமைப்பின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சிராஸ் நூர்தீன் கருத்து வெளியிட்டார்.
பொதுபலசேனாவின் குருமார்கள் குற்றவாளிகளாக அலைந்து திரிய விரும்பவில்லை. அதனால் நாட்டின் எந்த நீதிமன்றிலும் ஆஜராகுவதில்லை எனத்தீர்மானித்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில் எமது நாட்டில் சட்டம் ஒன்று இருக்கிறது. சட்டத்திற்கு அனைவரும் சமமானவர்கள். பொதுபலசேனா அமைப்பின் குருமார்களுக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடபடி முறைக் கோவையின் படி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிணைகள் நிபந்தனைகளின் கீழேயே வழங்கப்பட்டுள்ளன. பொதுபலசேனாவின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள குருமார்கள் நீதிமன்றில் குறிப்பிட்டதினத்தில் ஆஜராகாவிட்டால் அவர்களுக்கு எதிராக பிணை நிபந்தனையை மீறியதாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.
குற்றவியல் நடபடிக்கோவை இலக்கம் 192 உபபிரிவு 2இன் படி ஒரு குற்றவாளி நீதிமன்றில் ஆஜராகாதவிடத்து நீதிமன்றில் அவரது சமுகம் இன்றியே விசாரணை நடாத்தி தீர்ப்பு வழங்கப்பட முடியும். அதனால் நீதிமன்றில் வழக்குகளுக்காக ஆஜராக வேண்டிய பொது பல சேனா அமைப்பின் குருமார்கள் ஆஜராகாது விட்டால் இந்த நடைமுறையை நீதிமன்றம் அமுல்படுத்தும் குற்றமிழைத்தவர்கள் ஒரு போதும் தாம் நினைத்தவாறு சட்டத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளமுடியாது என்றார்.
பொதுபலசேனா அமைப்பின் குருமார்கள் பலருக்கு எதிராக நீதிமன்றங்களில் பல வழக்குகள் விசாரணையின் கீழ் இருக்கின்றன. அதன் செயலாளர் ஞானசார தேரர் மீது குர்ஆன் அவமதிப்பு உட்பட பல வழக்குகள் விசாரணையின் கீழ் உள்ளன.
ஜாதிக பல சேனாவின் தலைவரும் முன்னாள் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினருமான வட்டரக்க விஜித தேரர் பொதுபல சேனா அமைப்பின் குருமார்களுக்கெதிராக 8 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்குகளின் சந்தேக நபர்கள் 36 பேரும் பொதுபலசேனாவின் உறுப்பினர்களாகும்.
வட்டரக்க விஜிததேரரை கடுமையாக தாக்கியமை, காயம் விளைவித்தமை, அவர் பயணித்த வாகனத்தை சேதப்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வட்டரக்க விஜித தேரரை நம்மில் பலர் மறந்துவிட்டதுபோல் எனக்கு கவலையாக இருக்கின்றது. சோபித தேரரைவிடும் முஸ்லிம்களுக்காக வேண்டியே தனது உயிரையும் துச்சமாக மதித்து கருத்து வெளியிட்டு பொது பல சேனாவின் அராஜக தாக்குதல்களுக்கு உள்ளானவர் அவர்.
ReplyDeleteஅவருக்கும் நன்றியுள்ள சமூகமாக நாம் இருப்போம். அவர் தற்போது எங்கு, என்ன நிலையில் இருக்கிறார் என்பதை யாராவது அறியத்தருவீர்களா?