Header Ads



தனது மரணச் சடங்கில், வரவேற்பு உரை நிகழ்திய நபர் - அநுராதபுரத்தில் சம்பவம்

தனது மரணச் சடங்கில் தனது குரலிலேயே வரவேற்பு உரையை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்த ஒரு நபர் குறித்த தகவல் அநுராதபுரம் பிரதேசத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.

அநுராதரபும் மாவட்டத்தின் பரசன்கஸ்வெ வ பிரதேசத்தைச் சேர்ந்த டக்ளஸ் பெர்னாண்டோ என்ற 73 வயதான குறித்த நபரே இவ்வாறு மரணச் சடங்கில் தனது குரலில் வரவேற்பு உரை ஒலிபரப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்காக அவர் தனது மரணத்துக்கு முன்னதாகவே தனது சமாதிக்கான நினைவுத் தூபி, மரண வீட்டுக்கு வருகை தருவோரை எவ்வாறு உபசரிப்பது, மேலும் மரணச் சடங்கு நடைபெற வேண்டிய முறை என்பன குறித்து அப்பிரதேச விஹாரையின் பிரதம பிக்குவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த நபரின் விருப்பத்திற்கிணங்க இறுதிச் சடங்கில் நடைபெறும் அஞ்சலி உரைகள் தொடர்பாகவும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த இறுவட்டு ஒன்றின் மூலம் அறிவிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.