Header Ads



பாடசாலை மாணவர்களின் சீருடை விவகாரத்தினால், பாராளுமன்றத்தில் குழப்பம்

பாடசாலை மாணவர்கள் தமக்கான சீருடைகளை கொள்வனவு செய்ய பண வவூச்சர் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த விவாதம் காரணமாக நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் பண வவூச்சர் முறை குறித்து தெளிவுப்படுத்திக் கொண்டிருந்த போது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பியதால் இந்த அமளியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த சீருடை துணிகளுக்கு பதிலாக, மாணவர்கள் விரும்பியவாறு சீருடை துணிகளை கொள்வனவு செய்யும் வகையில், பண வவூச்சர்களை வழங்க கல்விமைச்சு தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.