Header Ads



பிரான்ஸில் ஹிஜாப் அணிந்ததால், வேலை இழந்தவர் தொடுத்த வழக்கு தள்ளுபடி

முஸ்லீம் தலையங்கியான, ஹிஜாபை அணிந்து வரக்கூடாது என்ற உத்தரவுக்கு பணிய மறுத்ததால் வேலை இழந்த பிரெஞ்சு மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் தொடுத்த வழக்கை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கை கிறிஸ்தியேன் இப்ராஹிமியான் என்ற பெண் தொடுத்திருந்தார். ஆனால் , மத விசுவாசங்களை வெளிப்படுத்தும் எந்த ஒரு குறியீடையும் அணிவது அரசுத் துறைகளில் வேலை பார்க்கும் அதிகாரிகளின் கடமை விதிகளை மீறுவதாகும் என்று நீதிமன்றம் கூறியது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அவருக்கு மூன்று மாத அவகாசம் இருக்கிறது.

பாரிஸ் நகரில் மருத்துவமனை ஒன்றில் உளவியல் துறையில் சமூகப்பணியாளராக வேலைபார்த்து வந்த கிறிஸ்தியேன் இப்ராஹிமியானின் பணி ஒப்பந்தம் 2000ம் ஆண்டில் டிசம்பர் மாதத்திற்குப் பின் புதுப்பிக்கப்படவில்லை.

அவர் பணியில் இருக்கும் நேரங்களில் தலையங்கியை ( ஹிஜாபை) அகற்ற மறுத்தார் என்று கூறிய மருத்துவமனை, இது குறித்து பல நோயாளிகளிடமிருந்து தனக்குப்புகார்கள் வந்ததாகவும் கூறியது.

கடந்த பத்தாண்டு காலத்தில் இப்ராஹிமியான் இந்த மருத்துவமனையின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெறப் போராடியும், பல பிரெஞ்சு தீர்ப்பாயங்கள் அவரது விண்ணப்பங்களை நிராகரித்தன.

இப்போது , ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றமும் அவரது வழக்கை நிராகரித்து, பிரன்ஸில் அமலில் உள்ள பணியிட நடைமுறைகளைப்பற்றி தீர்ப்பு சொல்வது தனது வேலையல்ல என்று கூறிவிட்டது.

பிரான்சில் , முகத்திரை போன்ற அங்கிகளை அணிவது, மத விசுவாசங்களை வெளிப்படுத்தும் செயல் என்று கருதப்படுகிறது. அரசு அதிகாரிகள் வேலையில் இருக்கும்போது மத சம்பந்தமான விவகாரங்களில் பக்கசார்பற்ற தன்மையைக் காட்டுமாறு கோரப்படுகிறார்கள்.

3 comments:

  1. ஹிஜாப் என்பது தலையை மட்டும் மூடும் அங்கி ஆகும், அதனை தடை செய்ய முடியாது. முகத்தை முடிவது நிகாப் ஆகும், அது அனுமதிக்கப்பட முடியாது.

    குறித்த பணிக்கு என்று இருக்கும் சீருடைகளில் மாற்றம் செய்ய சட்டத்தில் அனுமதி இல்லை என்றால், குறித்த வேலைக்கு சேராமல் இருப்பதுதான் ஒரே தீர்வு.

    உதாரணமாக, இராணுவத்தில் சேரும் ஒருவர், நீளக்காற்சட்டை அணிய முடியாது, வேட்டிதான் அணிவேன் என்று கூற முடியாது. அவர் வெட்டி அணியக் கூடிய பணிகளில் சேர்வதுதான் முறையாகும்.

    ReplyDelete
  2. மதவாதம், இனவாதம் மேலோங்க..
    ஜனநாயகம், மனித உரிமைகள் எனும்
    போலிக்கோசங்கள் கீழாகின்றன!
    ஐரோப்பாவின் உண்மைமுகம்
    இப்போ கண்ணை திறக்கின்றது!

    ReplyDelete
  3. கிருஸ்தவ மிஷனரிகளில் நன்னிகள் அணியும் ஆடையோடுதானே அவர்களும், பாதர்மார்களும் அரசாங்க பாடசாலைகளிலும், என் அரச அலுவலகங்களிலும் கடமை புரிகிறார்கள்! முஸ்லிம்கள் என்பதால் விதிவிலக்கோ!

    முஸ்லிம் பெண்களின் ஆடை ஒழுக்கம் சார்ந்தது, ஏனையவர்களின் ஆடைகள் போல் நாகரிகத்துக்காகவும், பெஷனுக்காகவும் அணியப்படுவதில்லை.

    மற்றவர்களின் பெண்கள் திறந்து காட்டவேண்டும் என்று நிர்ப்பந்திப்போரும், விரும்புவோரும் தாய், சகோதரி, மனைவி என்று தங்கள் பெண்களும் திறந்து காட்ட விரும்பவேண்டும்! அனுமதிக்கவேண்டும்!

    உண்மையில் பெண்களை ஒரு போகப்பொருளாக கையாள்வதற்கே
    அவர்களை கவர்ச்சியாக இருக்க வெள்ளையர்கள் கொண்டுவந்த சூழ்ச்சியில் சிக்கிவிட்ட மாற்று சமூகம் இன்று அதற்குள் முழு முஸ்லிம்களையும் மாட்டிவிட எடுக்கும் முயற்சிக்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

    இஸ்லாத்தின் உயிர்நாடியே ஒழுக்கம்தான்!

    ReplyDelete

Powered by Blogger.