Header Ads



பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபால, குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன்


8 வது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

திலங்க சுமதிபாலவின் பெயரை ரவுப் ஹக்கீமும் செல்வம் அடைக்களநாதனின் பெயரை சுமந்திரனும் முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் பாராளுமன்றின் ஆளும் கட்சி பிரதம கொரடாவாக கயந்த கருணாதிலகவும் அவை முதல்வராக லக்ஷமன் கிரியெல்லவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் பாராளுமன்றம் இன்று மாலை 3 மணிவரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் உரை நிகழ்த்துவார்.

2 comments:

  1. பெளசி நியமிக்கப்பட்டடிடுவாரோ என்று ரவூப் பயந்திரூப்பார்!

    ReplyDelete
  2. திலங்க சுமதிபால, ஒரு #தேர்தல்பட்டியல் உறுப்பினர், இன்னும் அவருக்கு கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்துவதற்குரிய அங்கீகாரம் மக்களால் இம்முறை புறக்கணிக்கப்பட்டது. தேசிய மட்டத்தில் கட்சிகளின் தெரிவாய் தேர்தல்பட்டியல் பகிரப்படுகிறதேயொளிய மாவட்ட மட்டத்தில் மக்களால் அல்ல. இதை நீங்கள் திருத்திக் கொள்வீர்கலென எண்ணுகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.