Header Ads



அலி ரொஷானுக்கு 5 யானைகள்

நிராஜ் ரொசான் எனப்படும் அலி ரொஷானுக்கு சொந்தமானது என கருதப்படும் மேலும் இரண்டு யானைகள் பின்னவல யானைகள் சரணாலயத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அனுமதிபத்தரமற்ற யானைகள் தொடர்பாக முன் எடுக்கப்படும் விசாரரணைகளுக்கு அமைவாக கடடுவளை - நவகமுவ பத்தினி தேவாலயத்திற்கு அருகாமையில் நேற்றைய தினம் மீட்கப்பட்டது.

இதனையடுத்து வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பான நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்று கொண்டு யானைகளை பின்னவல சரணாலயத்திடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக hiru செய்தி  பிரிவு வனவிலங்கு திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.டீ.ரத்நாயக்கவிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், அலி ரொசானுக்கு சொந்தமானதென  கருதப்படும் மேலும் மூன்று யானைகளை தேடி விசாரணைகள் முன் எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.