வசீம் தாஜுதீன் கொலையை மறைக்கவே, மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு வந்துள்ளார் - அனுரகுமார
றக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது மரண சான்றிதழில் அவர் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதனை மூடிமறைப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் அரசியலில் இருக்க வேண்டிய நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே வி பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்த றக்பீ வீரர் வசீம் தாஜுதீன், கொலை செய்யப்பட்டிருப்பதாக தற்போது விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தமது குடும்ப அங்கத்தவர்களையும, ஊழல் செய்த பணத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே மகிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்திருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Post a Comment