Header Ads



புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவோம் - ஹக்கீம்

சிறுபான்மை இன மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத-தேர்தல் தொகுதிகளுக்குப்  பொறுப்புக் கூறக்கூடிய தேர்தல் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத் தேர்தலின் பின் உருவாகும் ஐக்கிய தேசிய கட்சி அரசால் கொண்டு வரப்படும் என்று அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவ்ப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கொண்டுவரப்படவிருந்த தேர்தல் திருத்தச் சட்டமூலம் தம்மால் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கண்டி கடுகன்னாவையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவைத் தோற்கடித்து அவரை வீட்டுக்கு அனுப்பிய நாம் முன்னெடுத்த நூறு நாள் வேலைத் திட்டம் வெற்றியளித்துள்ளது.நாம் வரலாறு காணாத அபிவித்தித் திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அதிகமான சர்வதேச முதலீடுகள் இலங்கைக்கு வர இருக்கின்றன.உலக நாடுகள் இந்தத் தேர்தலின் முடிவை எதிர்பார்த்து இருக்கின்றன.நாம் மஹிந்தவைப்போல் சர்வதேச நாடுகளுடன் சண்டை பிடிப்பவர்கள் இல்லை.சர்வதேச  நாடுகளுக்கு நாம் அடிபணியாது நற்புடன் செயற்பட்டு வருகின்றோம்.

தனது குற்றத்தை மறைப்பதற்காக மஹிந்த அரசு சர்வதேச  சதி என்று கூறி மக்களை ஏமாற்றியதுபோல் நாம் எமாற்றமாட்டோம்.எமது சர்வதேச நிலைப்பாடு மிகவும் தெளிவானது;வெளிப்படையானது.

இலங்கை தொடர்பாக சர்வதேச  நாடுகள் கொண்டிருந்த தப்பான அபிப்பிராயத்தை நாம் இல்லாது செய்தோம்.இலங்கையை அந்நாடுகள் மிகவும் கேவலமாகப் பார்த்த அந்தப் பார்வையை நாம் மாற்றினோம்;புதிய பார்வையை புகுத்தினோம்;உலகம் முழுவதும் இலங்கை தொடர்பில் நல்லெண்ணத்தை  ஏற்படுத்தினோம்.

மஹிந்தவின் ஆட்சியில் அதிக வட்டிக்கு நிதி வழங்கிய நாடுகள் இப்போது குறைந்த வட்டியில் எமக்கு கடன் வழங்க உடன்பட்டுள்ளன.

இந்த நாட்டு மக்களுக்குப் பூரண சுதந்திரம் வழங்கினோம்.ஊழல்,மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளும் வகையில் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு சுதந்திரக் கட்சியினர் முயன்றனர்.அந்த முயற்சியை நாம் தோற்கடித்தோம்.

உதயமாகும் எமது புதிய அரசு தேர்தல் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வரும் .அனால்,அது சிறுபான்மை இன மக்களைப் பாதுகாப்பதாகவும்-தேர்தல் தொகுதிகளுக்குப் பொறுப்புக் கூறுவதாகவும் அமையும்.ஒருபோதும் ஒருசிலரின் நலன்களை பாதுகாப்பதற்காக் கொண்டு வரப்படாது.

ஊழல்,மோசடிகளை இல்லாதொழிப்பதற்காக தகவல் அறியும் சட்டமூலம் கொண்டு வரப்படுவது அவசியம்.அதற்கான ஏற்பாடுகளையும் எமது புதிய அரசு செய்யும்.

இவ்வாறான ஒரு ஜனநாயகமிக்க-நேர்மைமிக்க-வெளிப்படையான-மக்கள்நேய-ஊழல்,மோசடியற்ற அரசை உருவாக்குவது இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் கடமையாகும்.அந்தக் கடமையை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய முன்வர வேண்டும்
.
இனிமேலும்,இந்த நாட்டில் இனங்களிடையே கசப்புணர்வை வளர்க்கும்-மக்களைப் பலிக்கடாக்களாக மாற்றி அரசியல் செய்யும் சக்திகளைத் தோற்கடித்து  புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்புவோம்.-என்றார்.

5 comments:

  1. புதியதொரு நாட்டை கட்டியெளுப்புவதட்கு முதல் புதியதொரு முஸ்லிம் காங்கிரசை கட்சியை கட்டி எழுப்புங்கள். கட்சியை காப்பாற்றும் நிலைமையை ஏற்படுத்தும் கூட்டத்தை அகற்றி, மக்களுக்காக மக்களின் உரிமைக்காக போராடும், கட்சி தலைமையையும் கட்சியின் அரசியல் பிரமுகவர்களையும் கட்டி எழுப்புங்கள்.

    தலைவர் ஹக்கீம் அவர்களே, கட்சியின் தலைமைத்துவத்திலும் அதன் அரசியல் பிரமுகவர்களிலும் மிகவும் அதிருப்தி அடைந்தவர்களாகவே மக்கள் உள்ளனர். இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிகாகவே பெரும்பான்மையான மக்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள். எனவே இதுவே உங்கள் தலைமைத்துவத்துக்கு கொடுக்கப்படும் கடைசி சந்தர்பமாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் மக்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திக்கும் பாடுபடும், கட்டுப்பாடும்-ஒழுக்கமும் உள்ள கட்சியாக மாற்றி அமையுங்கள். தவறும் பட்சத்தில் அது மக்களால் மாற்றி அமைக்கப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

    இந்த தேர்தலில் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து முஸ்லிம்களின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்வதற்கு பேரினவாத தலைவர்களால் தந்திரமாக மேட்கொள்ளப்படும் முயற்சிக்கு முஸ்லிம் மக்கள் ( குறிப்பாக புத்தி ஜீவிகளும், இளைஞர்களும், பல்கலைகழக மாணவர்களும் ) சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என பணிவாய் கேட்டுக் கொள்கிறோம்.



    ReplyDelete
  2. புதியதொரு நாட்டை கட்டியெளுப்புவதட்கு முதல் புதியதொரு முஸ்லிம் காங்கிரசை கட்சியை கட்டி எழுப்புங்கள். கட்சியை காப்பாற்றும் நிலைமையை ஏற்படுத்தும் கூட்டத்தை அகற்றி, மக்களுக்காக மக்களின் உரிமைக்காக போராடும், கட்சி தலைமையையும் கட்சியின் அரசியல் பிரமுகவர்களையும் கட்டி எழுப்புங்கள்.

    தலைவர் ஹக்கீம் அவர்களே, கட்சியின் தலைமைத்துவத்திலும் அதன் அரசியல் பிரமுகவர்களிலும் மிகவும் அதிருப்தி அடைந்தவர்களாகவே மக்கள் உள்ளனர். இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சிகாகவே பெரும்பான்மையான மக்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்கிறார்கள். எனவே இதுவே உங்கள் தலைமைத்துவத்துக்கு கொடுக்கப்படும் கடைசி சந்தர்பமாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் மக்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திக்கும் பாடுபடும், கட்டுப்பாடும்-ஒழுக்கமும் உள்ள கட்சியாக மாற்றி அமையுங்கள். தவறும் பட்சத்தில் அது மக்களால் மாற்றி அமைக்கப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

    இந்த தேர்தலில் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து முஸ்லிம்களின் அரசியல் பலத்தை இல்லாமல் செய்வதற்கு பேரினவாத தலைவர்களால் தந்திரமாக மேட்கொள்ளப்படும் முயற்சிக்கு முஸ்லிம் மக்கள் ( குறிப்பாக புத்தி ஜீவிகளும், இளைஞர்களும், பல்கலைகழக மாணவர்களும் ) சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என பணிவாய் கேட்டுக் கொள்கிறோம்.



    ReplyDelete
  3. நீங்க சேரும் கட்சிகள் வெற்றிபெற்றால் எங்கய்யா புதிய நாடு உருவாகும்.. . . ??

    ReplyDelete
  4. Better to avoid this person coming 5years.better to take a rest with mahinda

    ReplyDelete
  5. சரியாக சொன்னிங்க குருவி, அக்றம்

    ReplyDelete

Powered by Blogger.