Header Ads



மஹிந்த தொடர்பில் தொடராக எழும் கேள்விகள்..??

மக்­களின் கோரிக்­கையை தட்­டிக்­க­ழிக்க தனக்கு உரிமை இல்லை என்­பதால் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­ட­வுள்­ள­தாக நேற்று மெத­மு­ல­னவில் வைத்து விஷேட அறி­விப்புச் செய்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, தான் எந்த கட்­சியில்? எந்தச் சின்­னத்தில் போட்­டி­யிடப் போகிறார் என்­பதை அறி­விக்­க­வில்லை.

'எந்தச் சந்­தர்ப்­பத்­திலும், எப்­போதும் நான் கட்­சிக்கும் நாட்­டுக்கும் துரோ­க­மி­ழைக்­க­வில்லை. நாட்­டையும் கட்­சி­யையும் பாது­காக்­க­வென அனைத்து மக்­க­ளையும் எம்­முடன் கைகோர்க்­கு­மாறு அழைப்பு விடுக்­கின்றோம்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி மட்­டு­மன்றி மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­களும் நாட்டின் பாது­காப்பு எதிர்­கா­லத்தை கருத்திற் கொண்டு தங்­க­ளோடு இணைத்து கொள்ள வேண்டும்.' என இந்த விஷேட உரையில் சுட்­டிக்­காட்­டிய முன்னள் ஜனா­தி­பதி மஹிந்த ரஜ­பக்ஷ எந்­த­வொரு இடத்­திலும் தான் சுதந்­திரக் கட்­சியில் போட்­டியட்ப் போவ­தா­கவோ அல்­லது தனித்து போட்­டி­யிடப் போவ­தா­கவோ அறி­விக்­க­வில்லை.

இந் நிலையில் இது தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ரஜ­ப­க்ஷவின் ஊடகப் பேச்­சாளர் ருவன் வெலி­விட்­டவை கேசரி வின­வி­யது.

இதற்கு பதி­ல­ளித்த ருவான் வெலி­விட்ட,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தேர்­தலில் போட்­டி­யடப் போவ­தக அறி­வித்­துள்ளார். எனினும் கட்சி, மற்றும் சின்னம் தொடர்பில் எவ்­வித அறி­விப்­புக்­க­ளையும் வெளி­யி­ட­வில்லை. எவ்­வா­றா­யினும் எதிர்­வரும் 9 ஆம் திகதி அனு­ரா­த­பு­றத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள கூட்­டத்தில் மஹிந்த ராஜ­பக்ஷ மேடை ஏறுவார் என நாம் நம்­பு­கின்றோம். அதற்­கான வய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

அவ்வாறு மேடை ஏறுவாறாயொஇன் அதற்கு முன்பதகவே கட்சி சின்னம் தொடர்பில் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். என்றார்.

1 comment:

  1. ஆடுநநைகிறதென்று ஓநாய் அழுகிறதென்று படித்திருக்கிறோம்.
    இப்போது அதை கண்கூடாகவே காண்கிறோம்.
    மக்கள் முட்டாள்களா?

    ReplyDelete

Powered by Blogger.