Header Ads



டக்ளஸ் தேவானந்தா, தனித்து களமிறங்குகிறார்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி வீணை சின்னத்தில் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல கட்சிகளிடமிருந்து தேர்தலுக்கான அழைப்பு தமக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்றைய தினம் யாழ்.நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாம் இந்த ஆட்சியை உருவாக்கியதாக கூறுகின்றது. ஆனால் இவர்களால் தமிழ் மக்களின் நிலங்களை விடுவிக்க முடிந்ததா? அரசியல் கைதிகளை விடுவிக்க முடிந்ததா? இல்லை.

முன்னைய ஆட்சியில் விடுவிக்க இருந்த நிலங்களை விடுவித்தார்கள்.

அதற்கு மேல் என்ன செய்தார்கள்? எதுவுமேயில்லை. இந்த நிலையில் தற்போது கூறுகின்றார்கள் அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதியை மீறிவிட்டதாம். எனவே மாற்றம் ஒன்றை உருவாக்காமல் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றார்.

1 comment:

  1. நீங்கள் அதைக்கூட செய்யவில்லையே டக்ளஸ்?

    ஒட்டுவதற்கு இடமில்லாத ஒட்டுப்படைக்கூட்டம் மெல்ல ஒதுங்க வேண்டியதுதான். ஒன்பது பத்து வாக்குப் பெற்று எம்பீக்களான காலத்தை அசைபோட்டுக்கொண்டு அப்படியே தூங்கி விடுங்கள். சந்தோசக்கனவுகளாவது வசப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.