Header Ads



"சிங்கக் கொடி" இனவாத அடிப்படையில் பார்க்கப்படுகிறது - பொதுபல சேனா

இலங்கையில் சிங்களக் கொடியான சிங்கக்கொடியை சில ஊடகங்கள்
இனவாத நோக்குடன் பார்ப்பதை ஆட்சேபித்து பொதுபல சேனா நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

இதன்போது கருத்துரைத்த பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே, சிங்களக்கொடி தேசிய கொடியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்று குறிப்பிட்டார்.

எனவே இது தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் குறைகூறுவோர் நாட்டின் கலாசாரம் மற்றும் வரலாறு தொடர்பில் தெளிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

1815ம் ஆண்டு பிரித்தானியர்கள் சிங்கள சிங்கக்கொடியை 1948ம் ஆண்டு வாரியபொல சுமங்கல தேரர் மீண்டும் ஏற்றினார்.

இது அப்போதைய பிரதமர் டி எஸ் சேனாநாயக்கவினால் ஏற்றிவைக்கப்பட்டது.

எனினும் அது இனவாத அடிப்படையில் பார்க்கப்படுகிறது என்று திலந்த குற்றம் சுமத்தினார்.

No comments

Powered by Blogger.