Header Ads



கொழும்பில் உக்கிர தேர்தல் மோதல் - ஒருவர் பலி, 11 பேர் காயம்

கொழும்பு -13,  கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பகுதியில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு பெண் ஒருவர் பலியானார். மேலும் 11 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்களில் வந்தோரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரவி கருணாநாயக்க, கலந்து கொள்ளவிருந்த கூட்டம் ஒன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

எனினும் சம்பவத்தின் போது ரவி கருணாநாயக்க அங்கு சமுகம் தரவில்லை. இந்தநிலையில் பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான முறுகலே இந்த சம்பவத்துக்கான காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.