"புளூமெண்டல் வன்முறை" தேர்தலில் வெற்றி பெற மேற்கொள்ளும் முயற்சி - கபீர் ஹசீம்
சிறந்த அரசியல் கலாச்சாரத்தை பார்க்க விரும்பாத நபர்கள் பயங்கரவாதத்தை பரப்பி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மேற்கொள்ளும் முயற்சியாக புளூமெண்டல் பகுதியில் இன்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை கூற முடியும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றினை வெளியிட்டு கட்சி செயலாளர் கபீர் ஹசீம் குறிப்பிட்டதாவது,
இவ்வாறான சம்பவங்களினால் அதிர்ச்சியடையாது எதிர்வரும் நாட்களில் மிகவும் வலுவான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி பெற்றுக்கொண்ட நல்லாட்சியை மீண்டும் உறுதி செய்வதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment