Header Ads



கோத்தபாய ஏற்பாடு..? மைத்திரி, மகிந்த இரகசிய சந்திப்பு...??

மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பிரதிநிதிகளுக்கு இடையில் கடந்த சில தினங்களாக இரகசியமான சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தேர்தல் முடிவு மற்றும் ஜனாதிபதி எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்து மகிந்த ராஜபக்ச தரப்பினரால் கேள்வி எழுப்பபட்டுள்ளது.

அத்துடன் மகிந்த ராஜபக்சவின் தலையெழுத்தை துயரமின்றி முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த பேச்சுவார்த்தைக்கான முனைப்புகளை கோத்தபாய ராஜபக்ச முன்னின்று செயற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.