முதன்முதலாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரி
அநுராதபுரத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் துமிந்த திஸாநாயக்கவின் தேர்தல் பிரசார கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
அநுராதபுர மாவட்டத்திற்கான ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதான அலுவலகத்திற்கு துமிந்த திஸாநாயக்கவுடன் சென்ற ஜனாதிபதி அங்கிருந்த மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த துமிந்த திஸாநாயக்க..
தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் தவறுகள் காணப்படுமாயின் நாங்கள் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை முதன்மைபப்டுத்தி பலமிக்க அரசாங்கமொன்றை உருவாக்கி திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் இன்றி நாட்டு பற்றுடன் செயற்படும் குழுவொன்றுடன் அரசாங்கமொன்றை உருவாக்குவதே எமது தேவையாகும்
Post a Comment