சமல் ராஜபக்ஸ அரசியலிலிருந்து ஓய்வு - பாராளுமன்ற தொகுதியில் பிரியாவிடை வைபவம்
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவரது பிரியாவிடை வைபவம் எதிர்வரு ஜூலை 07 ஆம் திகதி பி.ப. 3 மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என 72 வயதான சமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment