Header Ads



மகிந்தவுக்கு தேசியப் பட்­டி­யலில்கூட இட­மில்லை - ராஜித சேனா­ரத்ன, மகிந்ததான் பிரதமர் வேட்பாளர் - டிலான் பெரேரா

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி ­பதி மஹிந்த ராஜபக் ஷவை நியமிக்கக் கோரி ஜனா­தி­பதி நிய­மித்­துள்ள ஆறு பேர் கொண்ட குழு­வினர் ஜனா­தி­ப­திக்கு பரிந்­துரை செய்­துள்­ளனர். குழு­வி­னரின் இறுதி அறிக்­கை­யினை இன்று ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­க­வுள்­ளனர்.

நடை­பெ­ற­வி­ருக்கும் பொதுத் தேர்­த லில் சுதந்­திரக்கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் சார்பில் யாரை பொது வேட்­பா­ள­ராக நிய மிப்பதென்ற சிக்கல் நிலைமை தோன் றியுள்ள நிலையில் கட்­சிக்குள் தொடர்ச்­சி­யான முரண்­பா­டுகள் எழுந்துள்ளன.

கட்­சியை ஒன்­றி­ணைத்து அர­சாங்­கத்தை அமைக்கும் நோக்­கத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் முக்­கிய தலை­மைகள் முக்­கிய கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அந்த வகையில் நேற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் முக்­கிய சந்­திப்­புகள் நடை­பெற்­றுள்­ளன. நேற்று ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் இட­து­சாரிக் கட்­சிகள் மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் ஏனைய முக்­கிய உறுப்­பி­னர்கள் மற்றும் ஜனா­தி­ப­திக்­கி­டையில் முக்­கிய சந்­திப்­பொன்று நடை­பெற்­றது. இதில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியில் பங்­காளிக் கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு பல­மான கூட்­ட­ணி­யாக கள­மி­றக்கும் நோக்­கத்தில் அணைத்து தலை­மை­களும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளன.

இது தொடர்பில் அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன  தெரி­விக்­கையில் ,

இந்த பேச்­சு­வார்த்­தையின் போது கட்­சியின் வேட்பு மனுத்­தாக்கல் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதன்­போது ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பிர­தான கட்­சி­யாக ஸ்ரீலங்கா சதந்­திரக் கட்சி அங்கம் வகிப்­ப­தனால் வேட்பு மனுத்­தா­களின் போது ஏனைய கட்­சி­களை விடவும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கே அதிக வாய்ப்­புகள் இருப்­ப­தா­கவும் இதனால் ஏனைய கட்­சிகள் புறக்­க­ணிக்­கப்­படும் வாய்­புகள் இருப்­ப­தா­கவும் கட்­சிகள் தமது நிலைப்­பாட்­டினை முன்­வைத்­தனர் . எனினும் கட்­சியில் அனைத்துப் பங்­காளிக் கட்­சி­க­ளையும் பாது­காக்கும் வகையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் வேட்­பு­மனு தயா­ரிக்­க­படும் எனவும், குற்­ற­வா­ளிகள் மற்றும் கட்­சியில் கடந்த காலத்தில் குழப்பம் விளை­வித்த மோச­டிக்­கா­ரர்கள் யாரையும் இம்­முறை ஐக்­கிய மக்கள் சுதந்­தரக் கட்சின் சார்பில் கள­மி­றக்­கப்­பட மாட்­டாது என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

அதேபோல் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை கட்­சியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக நிய­மிக்கும் திட்டம் இல்லை எனவும், தேசியப் பட்­டி­யலில் கூட இட­மில்லை என தெளி­வாக ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

எனினும் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக நிய­மிப்­பதா இல்­லையா என்­பதை ஆராயும் வகையில் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட ஆறு பேர் உள்­ள­டங்­கிய குழு­வினர் தமது அறிக்­கையை இன்று ஜனா­தி­பதி மகி­திர்­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­க­வுள்­ளனர். இது தொடர்பில் குழுத் தலைவர் டிலான் பெரேரா தெரி­விக்­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் பிர­தமர் வேட்­பாளர் தொடர்பில் கடந்த சில கால­மா­கவே கட்­சிக்குள் முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில் கட்­சியின் பெரும்­பான்மை ஆத­ரவை ஆராயும் வகையில் நாம் பல பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். அதன் இறுதி முடிவை நாளை (இன்று ) ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைக்­க­வுள்ளோம். இதன் பொது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்க வேண்டும் என்ற தீர்­மா­னத்­துக்கு வந்­துள்ளோம். எனவே ஜனா­தி­பதி எந்தத் தீர்­மா­னத்­துக்கு இணக்கம் தெரி­விப்பார் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது. கட்­சியின் ஒரு­மித்த கருத்தும் இதுவே என அவர் குறிப்­பிட்டார்.

இதே­வேலை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வது தொடர்பில் ஆராயும் வகையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பிர­தான உறுப்­பி­னர்கள் நேற்று விசேட சந்­திப்­பொன்றை நடத்­தினர். சுமார் மூன்று மணி­நேரம் நடை­பெற்ற இந்த சந்­திப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா, ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­மா­ஜெ­யந்த மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­லடி சில்வா ஆகிய மூவரும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.

இதன்­பின்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளனர். எனினும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் மூவரும் ஊடகங்களுக்கு எவிதக் கருத்தையும் தெரிவிக்காது தவிர்த்துள்ளனர். இந்த பேச்சுவாதையின் போது மஹிந்தவை பிரதமர் வேட்பாளர் ஆக்கும் கட்சியின் தீர்மானம் தொடர்பில் மூவரும் இரகசியம் காத்து வருகின்றனர். எனினும் இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சசுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.

No comments

Powered by Blogger.