மஹிந்தவுக்கு வேட்பு மனு இல்லை - இறுதிமுடிவை அறிவித்த மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை தேர்தலில் வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என்று தங்களுக்கு அறிவித்ததாக சிறிய இடதுசாரி கட்சியின் தலைவர் லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
மஹிந்தவுக்கு வேட்பாளர் நிலை வழங்கப்பட தாம் இணக்கம் வெளியிட்டதாக வெளியான தகவலை ஜனாதிபதி மறு த்துள்ளார்.
எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் மூலம் அவரால் நாடாளுமன்றத்துக்கு தெரிவாக முடியும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
Post a Comment