Header Ads



பசில் ராஜபக்ஸவின் பிணை மனுவை நிராகரித்த நீதிபதி

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஸவை எதிர்வரும் ஜூன் மாதம் 10ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவை இன்று பரிசீலனை செய்த நீதவான் மனுவை நிராகரித்துள்ளார்.

திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தில் மோசடி செய்ததாக பசில் ராபஜக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க  திவி நெகும திட்டத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ.கே. ரணவக்க மற்றும் திவிநெகும வங்கியின் தலைவர் ஜீ.பி. திலகசிறி ஆகியோரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.