Header Ads



பிரதமர் வேட்பாளராக, மகிந்தவை களமிறக்க முடியாது - அடித்துச் சொன்னார் மைத்திரி

மகிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக ஐ.ம.சு. முன்னணி சார்பில் களமிறக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகளினுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் குமரகுபரன் தெரிவித்துள்ளார். 

மகிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு வாசுதேவ நாணயக்கார கோரிக்கையினை முன்வைத்ததாகவும் எனினும் அதனை அனுமதிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.