ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் அனுப்பியுள்ள அர்ஜுனா
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் நெருக்கமாக முயற்சித்து வருவதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்தக் கருத்துக்களை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
சூதாட்டக்காரர்கள், எதனோல் வியாபாரிகள், போதைப்பொருள் வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட தரப்பினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நெருங்கிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
மக்கள் பணத்தைக் கொள்ளையிடவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இவ்வாறான மோசடிகாரர்களின் முயற்சியை நாம் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்தாண்டு கால குடும்ப சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு ஆளும் எதிர்க்கட்சிகள் இணைந்து நாட்டை மீளக்கட்டியெழுப்பி வரும் முயற்சியை மலினப்படுத்த சிலர் சூழ்ச்சி செய்கின்றார்கள்.
இந்த சூழ்ச்சிகாரர்களின் பங்குதாரர்கள் ஆளும் கட்சிக்குள்ளும் இருக்கின்றார்கள் என்பது அதிர்ச்சியை அளிக்கின்றது.
இவ்வாறான நபர்களுக்கு எப்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தினாலும் வேட்பு மனுக்களை வழங்க வேண்டாம் என ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கோருகின்றேன் என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Post a Comment