Header Ads



போதைப்பொருள் விற்பனைக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு, தொடர்புடையவர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும்

இலங்கையில் இடம் பெறுகின்ற போதைப்பொருள் விற்பனைக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ பொது பாதுகாப்பு விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டான பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாருடைய தேவைக்காக போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் இந்நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். போதைப் பொருள் வியாபாரத்திற்கு தொடர்புடையவர்களை நிச்சயமாக தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. எல்லோரும் பேசுவார்கள், ஆனால் அக்சன் தான் இல்லை. மக்களை மடையர்கள் ஆக நினைக்கின்றார்கள், விரைவில் நல்ல ஒரு பாடம் படிப்பார்கள்.

    ReplyDelete
  2. When you are going take an action ? Wt happened to vela suda ? Don't give the statement do action

    ReplyDelete

Powered by Blogger.