Header Ads



ஜனாதிபதி மைத்திரிபாலவின், சகோதரரின் நிலைமை கவலைக்கிடம்

கோடாரியினால் தாக்கப்பட்ட படுகாயமடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேனவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை, அவர் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் 34 வயதான லக்மால்,  பக்கமுன பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு சரணடைந்தார். பக்கமுன பொலிஸார் அவரை பொலன்னறுவை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.

1 comment:

  1. ஒரு ஜனநாயக நாட்டில் யாரும் சட்டத்தை கையில் எடுப்பதையோ, இன்னொருவரைத் தாக்குவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.

    எனினும், இந்த தாக்குதலுக்கான மூல காரணம், சட்டவிரோத மணல் அகழ்வு என்பதனை கவனிக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.