Header Ads



டுபாயில் இலங்கையருக்கு ஆயுள்கால தண்டனை


தனது மனைவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான இலங்கை பிரஜைக்கு வாழ்நாள் சிறைதண்டனை விதித்து, டுபாய் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது மனைவி சில ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற காரணத்துக்காகவே மனைவியை கொலை செய்ததாக, சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

கொலை  செய்யப்பட்ட பெண்ணின் சடலம், அவர்களின் வீட்டிலுள்ள  களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் கால் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2007ஆம் ஆண்டு திருமணமான இந்த தம்பதியினர் டுபாயில் தொழில் புரிந்து வந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

No comments

Powered by Blogger.