Header Ads



மகன் கல்வி கற்ற வேண்டுமென்பதற்காக, பரிதாபமாக உயிர்விட்ட தாய்

மகன் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லாததால் அவனை மிரட்ட முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சுன்னாகம், சூராவத்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ந.சிவசோதி என்பவரே உயிரிழந்தவராவார்.

சிவசோதி மகனை தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். மகனோ நகருவதாகத் தெரியவில்லை.

சிவசோதி தனது உடலில் மண்ணென்ணையை ஊற்றி, "நீ செல்லாவிட்டால் நான் தீக்குளிப்பேன்' என்று மிரட்டியுள்ளார். அதன்பின்னர் மகன் எழுந்து சென்று விட்டார்.

அந்தத் தாய் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றியதைக் கவனத்தில் கொள்ளாது சமையலறைக்குச் சென்று அடுப்பருகே சென்றுள்ளார். அப்போது அவர் மீது தீப்பற்றிக் கொண்டுள்ளது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உடனடியாக சிவசோதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆயினும் சிகிச்சை பயனளிக்காது அவர் நேற்று உயிரிழந்தார்.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் விசாரணை மேற்கொண்டார். அதன்பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டனர். 

1 comment:

  1. மிகவும் கவலையான விடயம்.
    மகன் பாடசாலைக்கு செல்லவில்லை என்பதற்காக அல்ல, தனியார் கல்வி நிறுவனத்திற்கு செல்லவில்லை என்பதற்காக, இது கவனிக்கப்பட வேண்டிய விடயம். முன்னேறிய நாடுகளில், பாடசாலையில் படித்துக் கொடுக்கும் அதே விடயத்தை மீண்டும் அரைக்கும் டியூசன் கலாச்சாரம் இல்லை.

    மாணவர்கள் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தால், தங்களது ஏனைய செயல்பாடுகளில் ஈடுபட நேரம் கிடைக்கின்றது, ஆனால் இலங்கையில் தற்பொழுது அப்படி அல்ல.

    டியூசன் கலாச்சாரம் மாணவர்களை மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு, அவர்கள் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டிய மாலை நேரங்கள் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப் படுகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.