Header Ads



தேசிய சூரா சபையின் நிகழ்வில், சுஜீவ சேனசிங்க

​​தேசிய சூரா சபையின் ஏற்பாட்டில் “அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சகவாழ்வு” பகிரங்க சொற்பொழிவு 

அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சகவாழ்வு எனும் தலைப்பில் எதிர்வரும் செவ்வாய் கிழமை (31-03-2015)மாலை 6.30 மணிக்கு, இல.310, டீ.ஆர் விஜேவர்தன மாவத்த. கொழும்பு 10 இல் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் விஷேட பகிரங்க சொற்பொழிவு ஒன்றை தேசிய சூரா சபை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வின் விஷேட பேச்சாளராக பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வின் இறுதியில், கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பான பார்வையாளர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒர் விஷேட அமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய சூரா சபை சமூகத்தின் நடைமுறை விவாகரங்களை மையமாக வைத்து நடாத்திவரும் பகிரங்க சொற்பொழிவுத் தொடரில் இது இரண்டாவது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும்.

இந்நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை 0766 270 470 என்ற இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.


No comments

Powered by Blogger.