மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளேன் - பசில் ராஜபக்ச
விரைவில் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
திவி நெகும திணைக்களத்தில் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு வாக்கு மூலம் வழங்கும் நோக்கிலேயே இலங்கை வரவுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திவி நெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment