Header Ads



தேசியத்திற்கு உயிர் கொடுக்க, மகிந்த ராஜபக்ஸவுக்கு காலம் கனித்துள்ளது - விமல் வீரவன்ச (வீடியோ)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் பேரணியின் மற்றுமொரு நிகழ்வு நேற்று இரத்தினபுரியில் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 26க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

'வெற்றி கொண்ட சுதந்திரம் ஆபத்தில், தேசிய சவாலை வெற்றி கொள்ள அணிதிரள்வோம்" என்ற தெனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி என்பன இணைந்து மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இவ்வாறான கூட்டத்தை நடத்தி வருகின்றன.

இதன்போது கருத்துரைத்த விமல் வீரவன்ச தேசியத்திற்கு உயிர் கொடுக்க மகிந்த ராஜபக்ஸவுக்கு காலம் கனித்துள்ளதாக தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.