45 வயது நபர் கொரோனாவுக்கு மரணம் - மொத்த உயிரிழப்பு 195 ஆகியது
இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.
வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Post a Comment