Header Ads



விரைவில் நடைபெறவுள்ள பல்டிகள்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் அடுத்த சில தினங்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைய உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிரேஷ்ட உறுப்பினருடன் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலரும் பொதுஜன பெரமுனவில் இணைய உள்ளதாகவும் தெரியவருகிறது.

இவர்கள் ஏற்கனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த முக்கியஸ்தர், அந்த கட்சியின் நீண்டகால உறுப்பினர் என்பதுடன் கட்சியின் தலைமையிலான அரசாங்கங்களில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர் எனவும் பேசப்படுகிறது.

1 comment:

  1. இந்த பொய்மூட்டைக்கு அல்லது வீணாப்போன கள்ளக்கூட்டங்களுக்கு உங்கள் பெறுமதியான வாக்குகளை வீணாக்க வேண்டாம் என மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.