Header Ads



டெங்கினால் பாதிக்கப்பட்டு, பாடசாலை அதிபர் மரணம்

- Shajahan -

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நீர்கொழும்பில் பாடசாலை அதிபர் ஒருவர் மரணமாகியுள்ளார்.

நீர்கொழும்பு கல்வி வலயத்தின் கட்டானை கல்வி கோட்டத்தில் அமைந்துள்ள கட்டுநாயக்க ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலத்தின் அதிபரான கே.டி.சி. தமயந்தி என்பவரே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர் ஆவார்.

இவர் அக்கரபனஹ , கந்த சுரிதுகம பிரதேசத்தில் வசிப்பவராவார். நீர்கொழும்பு வைத்தியசாலையின் டெங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று புதன்கிழமை இரவு 7.50 மணியளவில் மரணமாகியுள்ளார்.

51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவரின் இரண்டு பிள்ளைகளில் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.