Header Ads



மைத்திரி - கோட்டா மனம்விட்டு உரையாடினர்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ளது.

நேற்றுமுன்தினம் இருவரும் தொலைபேசியில் உரையாடியபோது சில விடயங்களை மனம்விட்டு பேசியிருந்தனர் .அதன் தொடர்ச்சியாகவே இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

முன்னதாக கோட்டாபய சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவருடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார் ஜனாதிபதி.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டா போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. tn

No comments

Powered by Blogger.