கல்முனை கடலில் பிடிபட்ட, பல்லாயிரக்கணக்கான பாறைக்குட்டி மீன்கள் - மீனவர்களுக்கு மகிழ்ச்சி (படங்கள்)
- ULM றியாஸ் -
கல்முனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை -18- நண்பகல் வேளை கரைவலையில் அதிகளவான பாறைக்குட்டி மீன்கள் பெருமளவில் பிடிக்கப்படடன.
மிக நீண்டகாலமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கரைவலை மீனவர்களுக்கு, இன்று அதிஷ்ட்டம் நிறைந்த நாளாக இன்று காணப்பட்டது இன்று நண்பகல் வேளையில் ஒரு மீனவருக்கு சொந்தமான தோனிக்கு சுமார் 50 இலட்ச்சம் ரூபாய் பெறுமதியான மீன்கள் பிடிபட்டன மீன்களில் பெரும்பாலானவை வெளி மாவட்ட்ங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் ஒரு கிலோ பாரக்குட்டி மீன் கடற்கரையில் வைத்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் கரைவலை மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
Thank God.
ReplyDelete