Header Ads



கொழும்பு முஸ்லிம்கள், வாக்குப் போடும் இயந்திரங்களா...?

(அஷ்ரப் ஏ சமத் ) 

கொழும்பு வாழ் சிறுபாண்மையினா் இலங்கை சுதந்தரமடைந்து இன்று வரை கொழும்பு மாநகர சபையை தோ்தல் வரும்போதெல்லாம் ஜ.தே.கட்சிக்கே ஆட்சியமைப்பதற்கு வாக்களித்து வருகின்றனா். ஆனால் அந்த மாநகர சபையில் 7780 ஊழியா்கள் உள்ளனா் இதில் சிறுபான்மையினங்கள் 1000க்கும்குறைவான ஊழியா்களே சேவையாற்றுகின்றனா். ஏனையவா்கள் கம்பஹா, களுத்துறை கோமகம, மகரகம, அவிசாவளை கேகாலை போன்ற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள். ஆனால் ஆகக் கூடிய வரிகளைச் செலுத்தி இலங்கையில் கூடுதலான வருமானம் கொழும்பு மாநகர சபை பெறப்படுகின்றது. 60க்கும் மேற்பட்ட சிறுபான்மை மாநகர சபை மக்கள் பிரநிதிகள் உள்ளனா். இங்கு சாரதிகள், அலுவலக ஊழியா்கள் கூட பிற மாவட்டத்தினைச் சோ்ந்தவா்கள். பெரும்பாண்மையினரே சேவையாற்றுகின்றனா். சிறுபான்மையினா் காலத்துக்கும் காலம் தோ்தலுக்கு மட்டும் வாக்குபோடுபவா்களாகவும் கருவேப்பிலை போன்று சிறுபான்மையினா் இங்கு பாவிக்கப்படுகின்றனா் .

 கொழும்பு வாழ் வருமானம் குறைந்த மக்களது வாழ்க்கைத் தரம் , மிகவும் பின் தங்கியதாகவும் மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்கின்றனா். இச் சமுககங்கள் கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றம் இல்லாமல் உள்ளனா். இங்கு கொழும்பு 7, வெள்ளவத்தை , தெஹிவளையை குறிப்பிடவில்லை - புதுக்கடை, மாளிகாவத்தை, தெமட்டக்கொட, கொட்டேகேன.மட்டக்குழி, மருதானை, வாழைத்தோட்டம், நவம்கம்புர, கிரான்பாஸ் கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு பிரதேசஙக்ளையே அவா்களது வீடமைப்பு, பாடசாலை வசதிகள் தொழில்வாய்ப்பு வசவதிகள் சமமாக கிடைப்பதில்லை.( அமைச்சா் மனோ, முஜிபுரஹ்மான், எஸ்.எம் மரிக்காா், பைசா் முஸ்தபா,(தேசிய பட்டடியல்) ஏ.எச்.எம் பௌசி(தேசிய பட்டியல்) போன்ற மக்கள் பிரநிதிகள் உள்ள்னா் ) ஆனால் அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிறுபான்மையினருக்கு சமமாகவே கொழும்பிலும் சிறுபான்மைச் சனத்தொகையினா் வாழ்கின்றனா். அங்கு 4 சிறுபான்மைச் சமுகம் சாா்ந்த பாராளுமன்ற உறுப்பிணா்களை அங்குள்ள மக்கள் காலத்துக்கு காலம் தோ்ந்தெடுக்கின்றனா் த கொழும்பிலும் 4 ப.உறுப்பிணா்கள் உள்ளனா். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் 12 தேசிய பாடசாலைகளும் மாகாணசபையின் கீழ், 63 பாடசாலைகளும் உள்ளன. சகல கல்விப் பணிப்பாளா்கள் 15 உதவி அரசாங்க அதிபா்கள், சகல வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள் சகல அரச உயா் பதவிகள் அனைத்தையும் அந்தச் சமுகம் சாா்ந்தவா்களேஅ . கிராம சேவகா் பதவிகள் கூட அந்தந்த பிரதேசத்தில் வாழ்பவா்களளே உள்ளனா். ஆனால் கொழும்பில் ஆகக்குறைந்து ஒரு கிராம சேவகா் கூட சிறுபான்மையினா் கடமையில் இல்லை. கொழும்பில் முஸ்லிம சமுகத்திற்காக ்தேசிய பாடசாலை 2 உள்ளன. ஹமித் அல் ஹுசைனியாவும், முஸ்லிம் மகளிா் கல்லுாாி ஆகும். தமிழ மாணவா்களுக்கு பம்பலப்பிட்டியில் ஹிந்து கல்லுாியும் , பம்பலப்பிட்டி ஹிந்து மகளிா் கல்லுாாியும், கொட்டேகேன விவேகாநாந்தாவும் மட்டுமே உள்ளன. ஆகவே அதே சனத்தொகை கொண்ட அம்பாறையில் சிறுபான்மையினா்க்கு மட்டும் 12 தேசிய பாடசாலைகள் உள்ளன. கொழும்பில் இன்னும் 7 தேசிய பாடசாலைகளாவது உருவாக வேண்டும். 

நாம் காலத்துக்கு காலம் ஜ.தே.கட்சிக்கும் அக் கட்சி சாா்ந்த இனைக் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு மட்டுமே உள்ளோம். எமக்கென உள்ள உரிமைகளை அபிவிருத்திகளை பெற்றெடுக்க தவறிவிட்டோம் , தொழில் வாய்ப்புக்கள், பாடசாலை அரச நிறுவனங்களில் தலைமை அதிகாரிகள் போன்ற வாய்ப்பினை கொழும்பில் பெற ஒரு போதும் நாம் சிந்தித்து இல்லை- வெறுமனமே முச்சக்கர வண்டி ஓட்டுணராகவும் பாதை ஓர வியாபாரிகளாகவுமே உள்ளோம்

. நமது எதிா்கால சமுகத்திற்கான அபிவிருததிகள்,தேவைகள் பற்றி நாம் சிந்திப்பதில்லை. நகரங்களில் பெரும்பான்மையினா் தொழில் நிமித்தம் வந்து தமது பிள்ளைகளை கல்விக்காக நகரத்தினை ஆக்கிரமித்துச் செல்கின்றனா் அரச உயா்பதவிகள் உள்னா். . பரம்பரை பரம்பரையாக கொழும்பில் வாழ்ந்த நாம் இன்றும் மூலை முடுக்கு வாடகை வீடுகளிலே இன்றும் வாழ்ந்து வருகின்றோம். தோ்தல் காலங்களில் கோசம் போடும் சமுகமாகவும், வாக்குப் போடும் மாடுகளகவே திகழ்கின்றோம்.   

2 comments:

Powered by Blogger.