அக்குறணையில் மூன்றடி உயரத்திற்கு, பாய்கிறது வெள்ளம் (படங்கள்)
-Hafeez-
கண்டி –மாத்தலை பிரதான வீதியில் அக்குறணை நகரில் சுமார் மூன்று அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்துள்ளது (22.11.2018 இரவு)
மகாவலியின் கிளை நதியான பிங்கா ஓயா உற்புகுந்ததால் மாத்தனை வீதி, துனுவில வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கின. சுமார் ஒரு மணிநேரம் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல கடைகள் சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இது எத்தனையாவது தடவை நடந்திருக்கின்றது? தொடர்ந்து நடந்தும் வருகின்றது. இதற்கு நிரந்தரமான ஒருதீர்வு காணமுடியாதா...?
ReplyDeleteஇந்தப் பிரச்சினையை உருவாக்கி அதற்கு முழு வடிவம் கொடுத்தவர்கள் அக்குரணை வாழ் மக்கள்தான். அவர்கள் குறிப்பாக பிரச்சினை உருவாகக் காரணமான அனைவரும் சேர்ந்தால் இதற்கான ஒரு தீர்வை கொண்டுவரலாம்.அதுதவிர அதுபற்றி அங்கும் இங்கும் உரையாடி அல்லது அரசாங்கத்தையும் அதன் நிறுவனங்களையும் குறைகூறுவதால் நிச்சியம் இந்த பிரச்னை முடியாது. தொடர்ந்தும் டிசம்பர், ஜனவரி மழைகாலம் இன்னும் மாதத்துக்குப் பல வௌ்ளங்களையும் அழிவுநஷ்டங்களையும் அனுபவிக்க வித்திட்ட அனைவரும் ஒன்றுபட்டால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரலாம். சாத்தியமாகுமா? பொருத்திருந்து பார்ப்போம்.
ReplyDelete