பௌத்தர்கள், முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை - லக்ஷ்மன் கிரியெல்ல கருத்தை, வாபஸ்பெற வேண்டும்
முஸ்லிம்களிடம் பௌத்தர்கள் மன்னிப்பு கோரவேண்டும் என அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்தை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் எனவும் அவர் பௌத்தர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் திகன மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துத் தெரிவிக்கும்போது, அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல, பௌத்தர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என கூறியிருந்தார்.
முன்கோபத்தினைக் கொண்டு குழுவாக இணைந்து குழப்பத்தைவிளைக்க முயல்பவர்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயங்கரவாத செயற்பாடுகள் பௌத்தர்களால் ஒழுங்கமைக்கப்பட்டதல்ல. இவ்வாறான செயற்பாடுகளுக்கு முழு பௌத்த சமூகத்தையும் குற்றஞ்சாட்டுவது பெருங்குற்றமாகும்.
இது இந்நாட்டு மக்களை மத்திரமல்லாது வெளிநாட்டிலுள்ள மக்களையும் பிழையான வழியில் இட்டுச்செல்லக்கூடிய காரணி.
இதனால் பாரிய சம்பவங்கள் ஏற்படக்கூடும். அதனால் அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல கண்மூடித்தனமாக மேற்கொண்ட குற்றச்சாட்டினை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்றும், பௌத்தர் களிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயவின் பேச்சாளர் ஓமல்பே சோபித தேரர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆம். இது ஒட்டு மொத்த பௌத்த சமூகமும் திட்டமிட்டதல்ல.ஆனாலும் இப்படியான சம்பவங்கள் நடைபெறும் போது நல்ல பௌத்தர்களும் சேர்ந்து எதிர் தாக்குதல் நடாத்த முன் வரவேண்டும்.
ReplyDeleteDear Himi...
ReplyDeleteyou didnt understand what minister said..
Can you repeat his quote...?
IF ALL BUDDHISTS ARE REAL BUDDHISTS THEY BARE PRAISEWORTHY BY ALL WAYS AND MEANS. SAME WITH MUSLIMS AND OTHERS TOO. YOU CANNOT BLAME THE WHOLE COMMUNITY FOR THE MISDEEDS OF AN INDIVIDUAL OR GROUP.WE ALL MUST BE ASHAMED OF THE BEHAVIOUR OF A FEW IN EACH COMMUNITY.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete