மஹிந்த டீம், மைத்திரியுடன் சந்திப்பு - ரணிலை முறியடிக்க உதவுவதாக உறுதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியின் பாராளுமன்றக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இந்தக்குழு ஜனாதிபதியை சந்தித்ததுடன் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுதந்திரக்கட்சிக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தாம் ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக தெரிகின்றது.
Post a Comment