பள்ளிவாசல் காணியை சுவீகரிக்க திட்டம் - பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் கண்டனம்
-MM.Minhaj-
கடும் சர்ச்சைகளுக்குள்ளான திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசலை மீண்டும் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் சூட்சுமமாக எடுக்கப்பட்டுள்ளதாக சபையில் குற்றம் சாட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தனது கடுமையான கண்டனத்தையும் வெளியிட்டார்.
இராணுவத்தினர் இவ்வாறு பாரம்பரிய காணிகளை திட்டமிட்டு சுவீகரிக்கும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் முற்றாக கைவிடவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கைமீட்க முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் எனும் ஏதுவின் மீது கைமீட்டல் மற்றும் இலங்கை அரசாங்கம், யுக்ரேன் அரசாங்கத்திற்குமிடையே குற்றவியல் கருமங்களின் பரஸ்பர சட்ட உதவியளித்தல் பற்றி ஏற்படுத்தப்பட்ட கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான சட்டமூலங்களின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
திருகோணமலை நாச்சிக்குடா, வெள்ளைமணல் கருமலையூற்று பள்ளிவாசல் விடயம் ஏற்கனவே கடும் சர்ச்சைக்குரிய விடயமாக காணப்படுகின்றது. முன்னதாக புராதனப் பள்ளிவாசல்களில் ஒன்றான கருமலையூற்றுப் பள்ளிவாசல் அமைந்துள்ளதும் அதனைச் சூழவுள்ளதுமான காணிகளை கையகப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது 2ஆம் உலக யுத்தத்தில் புகழ்பெற்றிருந்த பாரம்பரிய பள்ளிவாசலான கருமலையூற்றுப் பள்ளிவாசல் சிதைக்கப்பட்டது. இதனால் கடுமையான சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு எதிராக கிழக்கு மாகாணசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் குறித்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் இராணுவத்தினருடன் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பிரதேசத்திற்கும் நேரடியாகச் சென்றிருந்தோம். இந்த சூழலில் சிதைக்கப்பட்ட அந்த பாரம்பரிய பள்ளிவாசலை மீண்டும் அமைத்து தருவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர்.
ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கின்றது. காணி எடுத்தற் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கருமலையூற்று பள்ளிவாசல் அமைந்துள்ள காணி உட்பட அதனைச் சூழவுள்ள 4.65ஹெக்டெயர் பரப்பளவான காணியை இராணுவத்தினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தலொன்றை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் பூர்வீகமாகவும் பாரம்பரிய பள்ளிவாசலும் காணப்படும் இக்காணிகளை சுவீகரிப்பதற்கு சூட்சுமமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு நான் இந்த சபையில் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை இரகசியமாக முன்னெடுப்பதை கைவிடவேண்டும் என்றார்.
அல்ஹம்து லில்லாஹ் எனது கடமை முடிந்துவிட்டது,பள்ளி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஒரு மாதிரியாக யாருக்கும் மனம் புண் பட்டுவிடாமல் பேசி முடித்துவிட்டேன்,இதிலும் ஏதும் பிழைகள் இருந்தால் மன்னித்து விடுங்கள்.இப்படிக்கு சாணக்கியம்.
ReplyDeleteWELL SAID MUSTAFA
ReplyDeleteதம்புள்ள பள்ளி முஸ்லிம் பள்ளி இல்லையோ
ReplyDeleteAll Muslims must stage extensive demonstrations against this sinister & unjust act of armed forces in trincomalee.
ReplyDeletesalute you jawfer
ReplyDelete